Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணத்தில் திருச்சி சிலை கடத்தலில் குற்றம் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவர் கைது

ஜுலை 14, 2019 07:47

கும்பகோணம்: கும்பகோணத்தில் சிலை தடுப்பு துறை காவல் துறையினர் 
கடந்த 2009 ஆம் ஆண்டு திருச்சி மலைக்கோட்டை இராணிமங்கம்மாள் அரசு அருங்காட்சியகத்தில் 31 சிலைகள் திருட்டு போன வழக்கில் தற்போது 21 சிலைகள் மீட்கப்பட்டன. 

மீதி 10 சிலைகள் குறித்தும் குற்றவாளிகள் குறித்து தேடிவந்த நிலையில் சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினர் உத்தரபிரதேசத்தில் சோனாலி  என்ற இடத்தில் பதுங்கியிருந்த காரைக்குடியை சேர்ந்த ராம்குமார் வயது 35 என்பவரை இன்று கைது செய்து நீதிபதி வீட்டில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி உள்ளனர்.

இவ்வழக்கில் மொத்தம் 9 பேர் உள்ளனர் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் 6வதுதாக கைது செய்த ராம்குமார் வருகிற 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சீனிவாச ராமானுஜன் உத்தரவிட்டார்  மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்